பாலியல் வன்கொடுமை வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் தொடர்பாக பெற்றோரின் பேட்டி..! என்ன சொல்லி இருக்கிறார்கள்…!!
பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி இருந்த நிலையில் குற்றவாளிகள் நால்வர் கைது செய்யப் பட்டனர். ஆரிப்,ஷிவா,நவீன், மற்றும் சின்ன கேஷ்வலு ஆகிய நால்வருமே கைது செய்யப் பட்டிருந்தனர்.
இவர்களிடம் 10 நாட்களாக விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 3.30 மணியளவில் பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது நால்வரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதன் போது பொலீஸார் சுட்டதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
இது தொடர்பாக இறந்தவர்களின் பெற்றோரிடம் பேசிய போது. : முகமது ஆரிப்பின் தாய் கூறுகையில். என் மகன் செய்தது முற்றிலும் தவறு தான். சரி என்று சொல்லவில்லை.. என் மகன் இப்போது உயிருடன் இல்லை என கூறி அழுததுடன் என்னால் பேசமுடியவில்லை என் மகன் குற்றவாளி என்றால் மட்டும் இந்த தண்டனை சரி என கதறி அழுதார்.
ஷிவாவின் தாய் கூறுகையில் நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.. என் மகன் குற்றம் செய்திருந்தால் பிரியங்காவை போல் எரித்துக் கொலை செய்துவிடுங்கள் என்றேன்… என் மகனின் இறப்பு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவன் தவறு செய்தாலும் எனக்கு மகன் தானே என அழுதது சுற்றி இருந்தவர்களையும் அழ வைத்தது.. ஷிவாவின் தந்தை கூறுகையில் என் மகனுக்கு கொடுத்த தண்டனையை குற்றம் செய்த அனைவருக்கும் கொடுப்பீர்களா என கொடுப்பீர்களா என கேட்டுள்ளார்.
சின்ன கேஷ்வலுவின் தாயார் கருத்து கூற மறுத்துவிட்டார். ..ஆனால் சின்ன கேஷ்வலுவின் மனைவி 7 மாத கர்பிணியாக இருக்கிறார். என் கணவரை கொலை செய்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொன்று விடுங்கள். நான் திருமணம் செய்து ஒரு வருடம் கூட ஆகவில்லை.. இந்த நிலையில் அவர் இறந்துவிட்டார். என்னால் அவர் இல்லாமல் இருக்க முடியாது என கூறியுள்ளார்..!!