ஜப்பானில் அதிகரித்து வரும் வெப்பநிலையை குறைக்க புதிய திட்டம்..!!!
ஜப்பானில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் மக்கள் கடும் துன்பங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இந்த வெப்பநிலையில் இருந்து தப்பிக்க மக்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அண்மையில் 2020 தோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு புது முயற்சியில் இறங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் போட்டி நடக்கும் பகுதிகளில் வானத்திலிருந்து செயற்கைப் பனியைக் கொட்ட ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. அந்த சோதனை முயற்சி தற்போது ஓரளவு வெற்றிபெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது வெப்பத்தால் பார்வையாளர்கள், விளையாட்டாளர்கள், தொண்டூழியர்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை இந்த குழு ஏற்ப்பாடு செய்துள்ளது.
2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டுக் குழுவின் உழைப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஜப்பானில் தற்போது வெப்பநிலை ஓரளவு குறைய தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.