அமெரிக்காவில் 2 வயதுடைய பெண் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்த வளர்ப்புப் பாட்டி..!!!
அமெரிக்காவில் சட்டனூகா நகரத்தில் டென்னசி பகுதியில் 2 வயதுடைய பெண் குழந்தையின் கால்களை கொஞ்சம் கூட ஈவிரக்கமின்றி வளர்ப்புப் பாட்டி கொதிக்கும் நீரில் போட்டு எடுத்த கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த குழந்தையின் கால்கள் சிவப்பு காயங்கள் மற்றும் கொப்புளங்கள் கணுக்கால் முதல் கால்விரல்கள் வரை ஏற்பட்டுள்ளது.
வளர்ப்பு பாட்டி குழந்தைக்கு காயத்தை ஏற்படுத்திய பின்னர் குழந்தையின் தாயிற்கு அழைப்பு ஏற்படுத்தி உடனே வீட்டிற்கு வருமாறு கூறிய போது குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டிற்கு வந்து தாய் குழந்தையை பார்த்த போது மகள் வேதனையுடன் அழுவதைக் கண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் குழந்தையின் பார்த்த மருத்துவர்கள் இரு கால்களிலும் ஒரே மாதிரியாக அதிர்ச்சியளிக்கும் காயங்கள் வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் குழந்தைக்கு தோல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் கால்களை இழக்க நேரிடும் என்று வைத்தியர்கள் குழந்தையின் தாயாரிடம் எச்சரித்துள்ளனர். அதோடு அடுத்த வாரம் குழந்தையின் தொடையில் இருந்து சிறிது சதையை எடுத்து அறுவை கிசிச்சை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற நாள் அன்று குழந்தையை வளர்ப்பு பாட்டியிடம் கொடுத்து விட்டு தாய் வெளியே சென்றுள்ளார். அந்த வேளையில் ஒன்னும் அறியாத குழந்தை தவறாக நடந்து கொண்டமைக்கு தண்டனை வழங்குவதற்காக குழந்தையை இவ்வாறு கொதி நீரில் போட்டு எடுத்தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குழந்தை பராமரிப்பாளராக இருந்த வளர்ப்புப் பாட்டி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது மோசமான குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் 150,000 பவுண் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.