மாலைதீவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து..! 100 பேர் படுகாயம்..!!
மாலைதீவின் தலைநகரான மாலேயில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாலைதீவின் தலைநகரான மலேயிலுள்ள குடியிருப்பு பகுதியில் இராசயனங்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கிடங்கிலேயே இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு உயிரிழந்த 49 வயதுடைய நபர் என தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து இந்த பகுதியில் ஏற்பட்ட தீயானது அருகில் உள்ள குடியிருப்புகளில் பரவிய நிலையில் நான்கு மணி நேரத்தில் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் தீ விபத்து தொடர்பில் இராணுவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
வெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் 5 பேர் மீட்கப்பட்டதோடு , 06 வீடுகள் மற்றும் இரசாயன கிடங்குகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளது. .