ஏன் தமிழர்களால் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிக்க முடியாது?? பேராசிரியர் கேள்வி..!
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் களத்தில் நின்று, தமிழர்களை கொன்று குவித்த பீட்ல் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தமிழ் மக்களால் வாக்களிக்க முடியுமெனின், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவை ஏன் ஆதரிக்க முடியாது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவே இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது நாடு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அதனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஒன்று ஏற்பட்டிருக்கின்ற நிலையில், எதிர்வரும் 29 ஆம் திகதி லேக்ஹவுஸிற்கு முன்பாக ஏற்பாடு செய்யவிருக்கும் கூட்டத்தின் போது தாம் இதுகுறித்த யோசனை ஒன்றையும் நிறைவேற்ற உள்ளதாகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இதன் போது தெரிவித்துள்ளார்.