மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாக செல்லக்கூடாது என தடை விதித்த பாகிஸ்தான் பல்கலைக்கழகம்…!!!
பாகிஸ்தானின் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாக செல்லக்கூடாது என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் நன்மை கருதி கல்லூரி நிர்வாகம் பல செயற்பாட்டை முன்னெடுப்பது வழக்கம். சில வேளைகளில் கல்லூரி நிர்வாகத்தின் இதுபோன்ற செயற்பாடு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி விட்டது. அந்த வகையில், தற்போது பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் சார்சத்தா பகுதியில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 23 ஆம் திகதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாக செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்வது இஸ்லாமியத்திற்கு எதிரானது என்றும் விதிகளை மீறுபவர்களிடம் அபராதத்தொகை விதிப்பது மட்டு மல்லாமல் பெற்றோரிடமும் இது குறித்து தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
அந்த நொட்டீஸ் ட்விட்டரில் வெளியானதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு சமூகவலைதளவாசிகள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் எந்த சட்டத்தில் இது போன்ற விதிகள் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.