சவுதி அரேபியா அரசாங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு…!!!
சவுதி அரேபிய அரசாங்கம் சுற்றுலா விசாக்களை வழங்கவுள்ளதாக அறிவித்த மறுநாளே இறுக்கமான உடைகள் அணிபவர்களுக்கும், பொது இடங்களில் முத்தம் கொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆண்களும், பெண்களும் நவநாகரிக ஆடைகளை அணிந்து கொள்ள முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது இருப்பினும் அவர்களின் உடை நல்ல முறையில் இருக்க வேண்டும், பொது இடங்களில் முத்தம் கொடுக்க ஈடுபடக் கூடாது, உட்பட 19 குற்றச் செயல்கள் இணங்காணப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இருப்பினும் அபராதத் தொகை எவ்வளவு என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அனைத்துலக சுற்றுலா பயணிகளுக்கு நம் நாட்டை குறித்து சட்டதிட்டங்களை புரிய வைக்கும் அவர்களும் பொது நடத்தைக்கு இணங்கி செயல்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர் .
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 49 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி ஆன்லைன் மூலம் சவுதி அரேபிய சுற்றுலா விசாக்களை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை சவுதி அரேபிய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதை தொடர்ந்து பொது நடத்தைக்கு அபராதம் விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
கச்சா எண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை சுற்றுலாத்துறை வசம் திருப்பும் முயற்சியாக இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.
2030 ஆம் ஆண்டிற்குள் சவுதி அரேபியா மாற்று பொருளாதாரத்திற்கு நகர்த்திச் செல்லும் வகையில் பல புதிய அறிவிப்புகளை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.