சவுதி அரேபியாவின் எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தியை குறைக்க திட்டம்..!!!
சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தியை குறைக்க தீர்மானித்துள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான அரம்கோ நிறுவனத்தின் இரண்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நேற்று ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதனை தொடர்ந்துநாள் ஒன்றிற்கு 5.7 மில்லியன் பீப்பாய் எரிபொருள் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய எரிபொருள்துறை அமைச்சரான இளவரசர் அப்துலஸிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடானது சவுதி அரேபியாவின் எரிபொருள் வெளியீடு 50 வீதமாகும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரம், இந்த தாக்குதலுக்காக 10 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஹேமனின் ஹவுத்தி கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் கூறியதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.