சவுதி அரேபிய எண்ணெய் நிலையங்கள் மீதான நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் அமெரிக்கா…!!!
சவுதி அரேபிய எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானம் மூலம் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறிய நிலையில்அதற்கான அறிக்கையை திரு. டிரம்ப்பின் வெளியானது.
சனிக்கிழமை அதிகாலையில் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 5 விழுக்காடு பாதிக்கப்பட்டது. எண்ணெய் விநியோகத்திற்கு தடை ஏற்படாமல் இருப்பதற்கு அமெரிக்காவின் எண்ணெயைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய இந்த தாக்குதலுக்குப் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.