சவுதி அரேபியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணம் 7 பேர் பலி..!!!!
சவுதி அரேபியாவில் பெய்த பலத்த காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக, அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
1,176 மக்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், 40 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளுார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.