எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்க தடை..!!!
இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி முயற்சித்துள்ளார். அதற்கு பலரும் எதிர்ப்பு கூறியுள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்திற்கு முன் உயர்நீதிமன்றம் மரணதண்டனை அமுலாக்கத்திற்கு இடமளித்தால் மரணதண்டனையை நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார்.