சவுதி அரேபியாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஹேமன் நாட்டு ஹவுத்தி போராளிகள்…!!!
சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது இன்னும் இந்த தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்துவோம் என ஹேமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் எச்சரித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற பகுதியிலுள்ள எண்ணெய் வயலையை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலால் சவுதியில் தினந்தோறும் 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஹேமனின் இருந்து தாக்கப்பட்ட இல்ல இது ஈரானின் கைவரிசை என அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஹவுத்தி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் நினைத்த நேரத்தில் எங்களது நீண்ட கரங்கள் சவுதி அரேபியா நாட்டின் எந்த பகுதிக்கும் நீளும்’ என்றும் அந்நாட்டு அரசுக்கு உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளது.
ஹேமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி அரேபியா மீது சமீபகாலமாக ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனினும் தாக்குதல் நடத்துவோம் என ஹவுத்தி போராளிகள் கூறியுள்ளனர்.