இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஃபீல்டர் ரவீந்திர ஜடேஜா என – ஸ்ரீதர்
கடந்த 10 வருடங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர் ஃபீல்டர் ரவீந்திர ஜடேஜா தான் என்று ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மூன்று வகை கிரிக்கெட்டிலும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மிரட்டி வருகிறது.
சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கடந்த 10 வருடங்களில் தலை சிறந்த வீரர் ஃபீல்டர் ரவீந்திர ஜடேஜா தான் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘ஜடேஜா களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது, அது அணிக்கு உத்வேகத்தை அதிகரிக்கும். அவரைப் போன்ற ஒருவரால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை, அபார ஃபீல்டிங் மூலம் நெருக்கடிக்கு உள்ளாக்க முடியும்.
அவர் களத்தில் எப்போதுமே ஒரு மிரட்டலாக இருப்பார். கடந்த 10 வருடங்களில் ஜடேஜா இந்தியாவின் தலைசிறந்த வீரர் ஃபீல்டர்’ என கூறியுள்ளார்.