எமது அரசாங்கத்தில் பரபட்ஷம் இன்றி அனைத்து மக்களுக்கும் நியாயமான தீர்வு கிடைக்கும் – கோத்தபாய
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த பொது மக்களின் காணிகள் 90 சதவீதமாக விடுவிக்கப்பட்டன. அதுவரை காலமும் கைது செய்யப்பட்டிருந்த போராளிகளில் 12 ஆயிரம் பேருக்கு புனருத்தாபனம் அளிக்கப்பட்டது. மீகுதியாக இருந்த 264 போராளிகள் தொடர்பில் 2015ம் ஆண்டுக்கு பிறகு புனருத்தாபனம் அளிக்கப்படவில்லை. அதோடு எமது அரசாங்கத்தில் பரபட்ஷம் இன்றி அனைத்து மக்களுக்கும் நியாயமான தீர்வு கிடைக்கும், அனைத்தும் சீர் செய்யப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று நடைபெற்ற லங்கா சமசமாஜ கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து கூறுகையில் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தையும், இறையான்மையினை பலப்படுத்தவும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்த தவறியுள்ளது. எவ்வித அடிப்படை கொள்கையும் இல்லாமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைக்கு இன்று அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணம் அரசியல் பழிவாங்கும் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை முதல் காரணம் என கோத்தாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.