மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பெண்ணின் இதயத்துடிப்பு – மருத்துவ உலகில் நடந்த அதிசயம்….!
சீனாவைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவருக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவர்கள் அவரின் இதயத்திற்குச் செல்லும் ஒரு குழாயினைத் துண்டித்து அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்டுள்ளனர். அச் சமயத்தில் சுமார் 72 மணித்தியாலங்களாக அந்த யுவதி இதயத் துடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் பராமரிக்கப்பட்டுள்ளார். சீனாவின் சியமென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதான யுவதி ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த மாணவி மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் அப் பெண்ணுக்கு ECMO – Extracorporeal Membrane Oxygenation இயந்திரத்தின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அப் பெண்ணில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இதனால் திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். அச் சிகிச்சை நேரத்தில் இதயத் துடிப்பு இருக்கக் கூடாது என்பதால் இதயத்திற்குச் செல்லும் நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் பின்னரேயே அவருக்கு அந் நரம்பு மீளவும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அப் பெண் 72 மணித்தியாலங்களாக இதயத் துடிப்பின்றி இருந்துள்ளார். இது மருத்துவ சாதனை என்று தெரிவிக்கப்படுகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”