காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை..!!!
காஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் வர்த்தகம், பொருளாதாரம், போக்குவரத்து போன்ற அனைத்தையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
சீனாவின் கோரிக்கைக்கு அமைவாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மூடிய அறை கலந்துரையாடல் ஒன்றை இன்று இடம்பெற்றதாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டாது என தெரிவித்துள்ளது.
அந்த பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்ட அனைத்து விடயங்கள் இரகசியமாகவே பேணப்படும். ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இந்திய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டிருந்த விசேட அந்தஸ்த்தை ரத்து செய்யப்படவுள்ளதாக அந்த நாட்டின் நாடாளுமன்றம்தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த விவாதத்தை நடத்துமாறு பாகிஸ்தானும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.