பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி முடிவு..!!
உலக அளவில் பிரபல்யம் அடைந்த வருகின்ற சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் ஒன்றாகும். பேஸ்புக் நிறுவனமாது பாவனையாளர்களின் கணக்குகளை பாதுகாப்பதற்காக மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை கேட்பது வழக்கமாகும். கணக்கில் அல்லது கடவுச் சொற்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது உரியரை உறுதிப்படுத்துவதற்கு இவை பயன்படுத்தப்படும். அதே வேளையில் பேஸ்புக்கில் காண்பிக்கப்படும் People You May Know எனும் வசதிக்காகவும் தொலைபேசி இலக்கங்களை பேஸ்புக் பயனாளர்களின் அனுமதி இன்றி பயன்படுத்தி வருகின்றது.
மேலும் இந்த நோக்கங்களை பாவனையாளர்களின் தொலைபேசி இலக்கத்தை உபயோகிப்பதை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் ட்ரொய்டர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் விளம்பர நோக்கங்களுக்காக பாவனையாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் உட்பட ஏனயை தரவுகளை அனுமதி இன்றி பேஸ்புக் பயன்படுத்தியிருந்தது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து இப் புதிய முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது.