பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மது அருந்திய 140 பேர் திடீர் மயங்கி விழுந்தனர்… 08 பேர் உயிரிழப்பு…!!!
நேற்றைய தினம் பிலிப்பைன்ஸில் லாகுவானா மாகாணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மது அருந்திய சுமார் 140 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தவறான மதுவை அருந்தியதால் இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8 பேர் பரிதாபமாக பலியானார். இதே வேளையில் குவேசான் மாகாணத்தின் கேண்டலேரியா நகரைச் சேர்ந்த ஒருவரும் தவறான மதுவை அருந்தியதால் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் கோமா நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். தவறான மதுவை தயாரித்து விற்பனை செய்தவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.