காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்…!!!
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று 11.00 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்றலில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்திலுள்ள விசாரணையை நிராகரிக்கின்றோம். காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை நடத்த வேண்டும். சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும். கலப்புப் பொறிமுறை வெறும் கண்துடைப்பு. அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் கொடிய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது.