இளம் பெண் ஒருவருக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள்..!! காரணம் என்ன தெரியுமா??
விமான நிலத்தில் அனுமதி மறுத்ததால் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம் பெண் செய்த வினோத செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிலிப்பைன்ஸ்சைச் சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டு விமான நிலையத்திற்கு சென்றார்.
குறித்த விமான நிலையத்திற்கு அவர் கொண்டு சென்ற சூட்கேஸ் 9கிகி எடையில் இருப்பதால் விமான அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துள்ளனர். உடனே ரோட்ரிக்ஸ் 2 கிகி எடை கொண்ட அவரது ஆடைகளை அடுக்கடுக்காக மேலே எடுத்து அணிந்துள்ளார்.
அதையடுத்து அந்த சூட்கேஸ் எடையை 6.5 கிலோவாக குறைத்த பின்னர் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதை புகைப்படமாக எடுத்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் 31,000 லைக்குகளையும், 1,000 கருத்துக்களையும் பெற்றுள்ளதுடன்19,000க்கும் அதிகமானோரால் அதை பகிரப்பட்டுள்ளது.