சிங்கப்பூரில் 10 ஆவது கொரோனா மரணம்..!!
சிங்கப்பூரில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் 10வது நபர் நேற்று உயிரிழந்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த 70 வயதுடைய சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவர். அவர் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு வந்தார். குறித்த நபர் சஃப்ரா ஜூரோங் கொரோனா வைரஸ் தொற்று குழுமத்திற்குத் தொடர்புடையவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி நபர் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டார். சிங்கப்பூரில் நேற்று மேலும் 334 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 3,252ஆக உள்ளது.