முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு கொரோனா பரிசோதனை..!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பொலிஸாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டு 20 ஆம் திகதிவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த நிலையில், நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப்போது நடைமுறையில் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.