கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவுவார் – ரிஷாப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷாப் பண்ட் டோனி தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் ” டோனி கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார்” என கூறினார். எந்த பிரச்சினை வந்தாலும், நான் எளிதில் அணுகலாம். பிரச்சினைக்கான முழுமையாக தீர்வை அவர் ஒரு போதும் சொல்லமாட்டார். ஏனெனில் நாம் முழுமையாக அவரை சார்ந்திருக்க கூடாது என்று அவர் நினைப்பார். பிரச்சனைகளுக்கான தீர்வாக சில குறிப்புகளை சொல்வார், அதன் மூலம் நாம் தீர்வு காணமுடியும்.
டோனி எனக்கு மிகவும் பிடித்த துடுப்பாட்ட இணை ஆவார். அவர் களத்தில் இருக்கையில் நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை தெளிவாக வைத்து இருப்பார். அந்த திட்டத்தை நாம் பின்பற்றினால் போதுமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.