ஆஸ்துமா நோயினால் அவஸ்த்தை படுகின்றீர்களா ? ஏலக்காய் போதும் உங்களுக்கு உடனடி தீர்வு.!!
கறுப்பு ஏலக்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் நிறைய நிறைய மருத்துவ துறைகளிலும் அதே நேரத்தில் அழகு பராமரிப்புக்கும் பெரிதும் பயன்படுகிறது. கறுப்பு ஏலக்காய் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதன் அரோமேட்டிக் நறுமணத்தால் பிரியாணி முதல் இந்திய உணவு வகைகளில் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இது இதய நோய்கள், குடல் சார்ந்த பிரச்சனைகள், சுவாச மண்டல பிரச்சினைகள், ஆஸ்துமா போன்றவற்றிற்கு உதவுகிறது.
அதுமட்டும் அல்லாது இன்னும் நிறைய ஆரோக்கியக் கோளாறுகளை இந்த கறுப்பு ஏலக்காய் சரி செய்கிறது. இதை வெறுமனே வாயில் போட்டு சுவிங்கம் போல் மென்று வந்தாலே போதும் சுவாசப் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள், இருமல், நுரையீரல் காசநோய், ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கறுப்பு ஏலக்காய் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரத்தம் கட்டிப் போவதையும் தடுக்கிறது.
உங்களுக்கு வாயில் ஏற்படும் பற்சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்றவற்றை சரியாக்க வெறும் 2 கறுப்பு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்றாலே போதும்.இந்த கறுப்பு ஏலக்காயை கொண்டு எப்படி கசாயம் தயாரிக்கலாம் என்பதை நம்முடைய முன்னோர்கள் விளக்கியுள்ளனர்.
தேவையான பொருட்கள். 2 கிராம்பு,4-5 கறுப்பு ஏலக்காய்,1 டீ ஸ்பூன் இஞ்சி (துருவியது) 5-6 துளசி இலைகள்,3-4 கப் தண்ணீர்,மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை ஒரு கடாயில் போட்டு வதக்குங்கள், இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு துளசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.பின் இறக்கி குடித்து வர மேற் கூறிய அனைத்து நோய்களும் பறந்து விடும்.