குட்டிப்பையனும் முள்ளம் பன்றியும் வீதியில் செய்த வேலையைப் பாருங்கள்!
மனிதனிலிருந்து மிருகங்கள் தூர இருந்தாலும், அவை மனிதர்களின் செயற்பாடுகளுக்கேற்ப தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன.
உதாரணமாக நாயை எடுத்துக்கொண்டால், அதனுடன் நாம் அன்பாகப் பழகினால், அது எம்முடன் கொஞ்சி விளையாடும். நமக்கு ஏதும் தீங்குகள் ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்தால் அதிலிருந்து காக்கவும் முற்படும்.
அதேவேளை, அதை நாம் கோபப்படுத்தி அடித்துத் துரத்தினால், அது நம்மைக் கண்டதும் குரைத்து நம்மைக் கடிக்க முற்படும்.
அதுபோலத்தான், குட்டி பையன் ஒருவனும் முள்ளம்பன்றி ஒன்றும் அளவளாவிச் சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
முள்ளம்பன்றிகள் பொதுவாக பயந்த சுபாவம் உடையவை.
தங்கள் அருகில் மனிதனோ, மிருகமோ வந்தால், தமது உடலை முள்ளால் மறைத்துக் கொள்ளும்.
ஆனால், சிறுவன் ஒருவன் வீதியொன்றில் சென்று கொண்டிருந்தபோது, அவனைப் பின் தொடர்ந்தபடியே முள்ளம்பன்றி ஒன்றும் வேகமாகச் சென்றுள்ளது.
சிறுவனும் முள்ளம்பன்றியும் சாவகாசமாக விளையாடிச் செல்லும் இந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
A little boy and his friend a porcupine walking on a country road pic.twitter.com/5tmRMSdmeA
— Naturism.Com (@NaturismC) January 18, 2020