உடலில் உள்ள கொடுமையான சில நோய்களை வியர்வை யூடாக வெளியேற்ற இந்த இந்த பூவை பயன் படுத்துங்கள். அதிகம் பகிருங்கள்..!!
ஆவாரம் பூ கடுமையான வறட்சியில் கூட வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதன் இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்தும் மருத்துவ குணம் கொண்டது. “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு ஆவாரம் பூ உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.நமது நாட்டில் பலவிதமான மூலிகைகள் பயிராகின்றன.
இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் தான் நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகை கூட உபயோகப்படுத்தாமல் இருக்கிறோம்.ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன.
ஆவாரம் பூவை தேநீராக்கிப் பயன்படுத்தினால் மலச்சிக்கல், சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கள்,தைபோயிட் மற்றும் கொலரா,சர்க்கரை நோய் என்பன குணமாகும்.ஆவாரம் பூ தேநீரை தொடர்ந்து பருகுவதால், உடலில் உள்ள நச்சுகள் வியர்வை மூலம் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி குடற்ப்புண், வயிற்று புண் ஆகியவை குணமாகும்.
இந்த டீயை செய்யும் முறையை தற்போது பார்க்கலாம் : ஆவரம் பூவின் வேர் , இலை , பூ, பட்டை போன்றவற்றை காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இவற்றை பவுடராக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் 10 மணி அல்லது 3 மணி தேநீர் வேலையில் டீ தூள் பயன் படுத்துவற்கு பதில் இதனை பயன் படுத்துங்கள் . ஒரு நாளைக்கு ஒருமுறை இந்த டீ குடித்தால் போதுமானது..!!