தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கிட்டத்தட்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அறியமுடிகின்றது. 17 சீக்கியர்கள் மற்றும் ஒரு ஹிந்து உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அந்த நகரின் மாகாண கவர்னர் மாளிகைக்கு 100 மீட்டர் தூரத்தில் உள்ள சந்தையொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்த நகரின் சிறுபாண்மை இனத்தவரான சீக்கியர்கள் 17 பேர் உயிரிழந்ததுடன் 20 பேருக்கு மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
அதிபர் அஸ்ரப் அங்கு வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைப்பதற்காக வந்திருந்த வேளையிலேயே இந்த சம்பவமானது ஐ.எஸ் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆப்கான் இந்தியத் தூதரகமானது இந்த சம்பவத்தை “கோழைத்தனமான பயங்கரவாதம்” என்பதாக கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.