வரும் மாதத்தில் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மேலும் இறுக்குகின்றது அமெரிக்கா…
ஈரான் வரலாற்றுச் சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா பிரான்ஸ் சீனா மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுடன் 2015ம் ஆண்டு ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அந்த ஒப்பந்தத்திலிருந்து ஈரான் தவறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அவ் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானபோது தடைசெய்யப்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கள் மீண்டும் நடைமுறைக்கு வரும் என முன்னர் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
மேலும் இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட வேண்டும் எனவும் அப்படிச் செய்யாத நாடுகள் பொருளாதார தடையினைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்ட ஈரான் மீதான எல்லா பொருளாதாரத் தடைகளும் வருகின்ற (நவம்பர்) மாதம் 5ம் திகதிக்குள் மீண்டும் அமுல் படுத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஈரான் உலகின் முண்ணணி பயங்கரவாத நாடு எனவும் மிகவும் உயிரிழப்புக்களை ஏற்படுத்துகின்ற அணு ஆயுதங்களை தயாரிக்க ஒரு போதும் அமெரிக்கா இடம் கொடுக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”