நலன் கேட்கச் சென்ற நியூசிலாந்து பிரதமரிடம் – நலமா இருக்கின்றீர்களா என்று கேட்ட சுட்டி…!
நியூசிலாந்தில் அண்மையில் தீவிரவாதி ஒருவனின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி இறந்து போன 50 பேரில் 3 பாடசாலைச் சிறுவர்களும் அடங்குகின்ற நிலையில் அவர்கள் கல்வி கற்றுவந்த Christchurch’s Cashmere High School ற்கு நியூசிலாந்து பிரதமர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்தோடு அப் பாடசாலையில் இடம்பெற்ற இரங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டு அவர் உரையாற்றியுள்ளார். மாணவர்கள் அவரை வரவேற்றுள்ளனர்.
அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தன்னை வரவேற்ற முறைக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், அவர்களது நண்பர்களின் இறப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்தோடு அச் சம்பவத்தால் தான் மிகவும் வருத்தம் அடைவதாகவும் மாணவர்கள் தமக்கும் தேவையான உதவிகளைக் கேட்கும்படியும் கூறியுள்ளார்.
அச் சந்தர்ப்பத்தில் அப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பிரதமரைப் பார்த்து நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா என்று விசாரித்துள்ளார். அதற்கு பிரதமர் இல்லை .. நான் கவலையாக இருக்கின்றேன் என்று பதிலளித்துள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”