சுவை சேர்க்கும் பாகற்காய் சம்பல்
பாவாற்காயில் மருத்துவ குணங்கள் உள்ளது. அதிகமானோர் இது கசப்பாக இருக்குமென சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் இது சாப்பிட வேண்டும். இதை சுவையாக சாப்பிட தூண்ட எப்பிடி செய்யலாம்???
தேவையானவை
நடுத்தர அளவான பாகற்காய்கள் – 2 (500 கிராம்)
தக்காளி – 150 கிராம்
பெரிய வெங்காயம் – பாதி
பச்சை மிளகாய் – ஒன்று
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – அளவுக்கு
எண்ணெய் – பொரிக்க
வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக அரிந்து உதிர்த்து வைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கி வைக்கவும். பாகற்காயைக் கழுவி நீளமாக இரண்டாக வெட்டி, உட்பகுதியை கரண்டியால் சுரண்டி நீக்கி மெல்லிதாக (அரைவட்டமாக) நறுக்கி வைக்கவும். நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய விட்டு, காயை சிறிது சிறிதாகப் போட்டு (காய் நீர் விட்டு இருக்கும். அழுத்திப் பிழியாமல் வடித்து எடுத்துப் போடவும்) பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பேப்பர் டவலில் பரவலாகப் போட்டு நன்கு எண்ணெயை வடியவிடவும். மற்றைய பொருட்களையும் சேர்த்து சாம்லாக செய்யவும்.