தோல்வியில் முடிந்த தெரேசா மேயின் இரண்டாம் தீர்மானம் – என்ன ஆகுமோ பிரெக்சிட்…!
ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் தெரேசா மேயின் இரண்டாவது தீர்மானமும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 149 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப் பட்டுள்ள நிலையில் தெரேசா மேயின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான பிரெக்ஸிட் நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வரும் நிலையில்
இதற்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்திருந்தது. அத்தோடு ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேயை வலியுறுத்தினர்.
எனினும் ஐரோப்பிய கூட்டமைப்பு புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. பிரெக்ஸிட் நடவடிக்கையின் காலக்கெடு இம்மாதம் 29-ஆம் திகதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானிய வெளியேறுவதற்கு முயன்று வருகின்றது.
இதற்கான வாக்கெடுப்பு மார்ச் 12 இல் இடம்பெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய நேற்று அதற்கான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற வேளையிலேயே அது தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”