பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு – பூசகர் உட்பட 5 பேர் கிளிநொச்சியில் கைது…!
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வன்னியில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைத் தோண்டி எடுத்து அவற்றை தெற்கில் செயற்படும் பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்ற சந்தேகத்தில் கிளிநொச்சியில் பூசகர் ஒருவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இவர்களுடன் தென்னிலங்கை பாதாள உலகக் குழுவினர் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இவ் விடயம் குறித்து உளவுத் துறையினர் கொடுத்த உளவு அறிக்கைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ் விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் (சி.சி.டி) மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”