பொள்ளாச்சி திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் கிடைத்த அதிர வைக்கும் ஆதாரங்கள்.. இந்த மிருகங்களை என்ன செய்வது? ஒரு நிமிடம் பாருங்கள்…
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக இன்னும் எத்தனை எத்தனை கொடூரங்கள் வெளி வரப் போகிறதோ தெரியவில்லை. பேஸ்புக் ஊடாக மட்டும் இன்றி நேரிலும் பார்த்து பழகி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிலர் கைதாகி உள்ளது நாம் அறிந்ததே நேற்றைய தினம் குற்றவாளிகளுக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி பொலீஸாருகு உத்தரவிடப் பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸார் தேடுதல் நடத்தினார்கள். ஏற்கனவே பொலீஸாரிடம் 1000 மேற்பட்ட வீடியோ உள்ள நிலையில் இரண்டு மூன்று வீடியோக்கள் நக்கீரனால் வெளியானது.இதனை தொடர்ந்து தான் இந்த வழக்கு சூடு பிடித்தது.
தற்போது இது தொடர்பாக மேலதிக விசாரணை ஆரம்பித்த பொலீஸார் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டை சோதனை செய்த போது அங்கு கிடைத்த பொருட்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மயக்கமடைய வைக்கும் ஸ்ப்ரே போத்தல்கள்,
போதை மாத்திரைகள், காண்டம், பெண்களின் உள்ளாடைகள் உட்பட இன்னும் சில ஆதரங்கள் கிடைத்துள்ளது.பண்ணை வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறைகளில் கேமராங்கள் பூட்டப் பட்டிருந்துள்ளது. எனவே அதில் இருந்தும் பொலீஸாருக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இதுக்கு மேலும் இவர்களை சட்டம் தண்டிக்காமல் விட்டால் என்ன நடக்கும். எம் நாட்டில் சில நாட்களுக்கு மட்டுமே இதற்காக பேசுவார்கள், பின் இவற்றை மறந்துவிடுவார்கள். இதற்கு நிச்சயம் முடிவு வேண்டும் ஜல்லிக்கட்டு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு பெண்களின் மானமும் முக்கியம். ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”