மொசாம்பிக்கில் தொடரும் பதற்றம்… கொத்துக் கொத்தாக மிதக்கும் சடலங்கள்.
மொசாம்பிக் நாட்டில் “இடை” புயலின் தாக்கத்தில் பெருந்தொகையான மக்கள் இறந்துள்ளதாகவும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் “இடை” புயல் தாக்கியதில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 242 ல் இருந்து 417 ஆக உயர்ந்துள்ளது என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர்.
Celso Correia தகவல் வெளியிட்டுள்ளார்.மணிக்கு 177 கி.மீ வேகத்தில் அண்டை நாடுகளான ஜிம்பாவே மற்றும் மலாவி நோக்கி நகர்ந்தது. அங்கும் தற்போது வரை 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருப்பதால்
உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் பாதுகாப்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது.
ஏறக்குறைய 90,000 மொசாம்பிக்கர்கள் தற்காலிக இடங்களில் தங்கி இருக்கின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில், சடலங்கள் கொத்துக் கொத்தாக மிதப்பதாலும், பாம்புகள் அதிகளவில் திரிவதாலும் சுகாதாரக்கேடு ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”