கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க எந்த எந்த பொருளை தொட்டால் உடனடியாக “சோப்” போட்டு கைகளை கழுவ வேண்டும்.!? இதோ வைரலாகும் தகவல்..!!
கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பெண்களுக்கு சில விடயங்களை சுகாதார அமைப்புகள் வழங்கி வருகிறது. பொதுவாக வெளியே சென்று வீட்டிற்குள் வரும் போது குளித்துவிட்டு வர சொல்லியும், சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவும் படியும் கூறியுள்ள நிலையில் தற்போது இன்னும் சில விடயங்களை மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
எந்த எந்த பொருளை தொட்டால் நிச்சயம் கைகளை கழுவ வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். கதவின் கை பிடி, தண்ணீர் பைப்பின் கைபிடி, தரையில் கை வைத்து இருந்துவிட்டு எழும் போது, மரக்கறி வெட்டும் பலகை, மற்றும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
கத்தி பிடிக்கும் போது, நிச்சயம் கழுவ வேண்டும். இரும்புகள், பிளாஸ்டிக் போன்றவற்றை தொட்டால் கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும். வாயில் கையை வைத்து இருமினால், தும்மினால் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
குழந்தைகளை குளிக்க வைப்பற்கு முன்பும் கைகளை கழுவ வேண்டும். இப்படி வீட்டில் ஏதேனும் பொருளை தொட்டால் கைகளை கழுவுங்கள். இது அனைத்து விதத்திலும் உங்களை காப்பாற்றி விடும்..!!