அல்லாஹு அக்பர் என கதறியவாறு தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாத பெண்ணுக்கு 42 வருடங்கள் சிறை!!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் ( மெல்பேர்ண்) மில்பார்க் பகுதியில் Roger சிங்காரவேலு எனும் நபரினை கத்தியால் கொடூரமாக குத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டினைச் சேர்ந்த மொமீனா ஷோமா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சட்டவியல் வரலாற்றில் முதன் முறையாக வழங்கப்பட்ட அதிக பட்ச சிறைத் தண்டனை இதுவாகும்.சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது ,
ஆஸ்திரேலியாவின் bundoora Latrobe பல்கலைக் கழகத்தில் scholarship முறை மூலம் கல்வி கற்க தெரிவு செய்யப்பட்ட மொமீனா ஷோமா ,
ஆஸ்திரேலியா வந்து சில நாட்களிலே அவர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான Roger சிங்காரவேலு மீது “அல்லாகு அக்பர்” என கதறியவாறு கொலை வெறியுடன் கத்தியால் குத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.