பிரான்ஸில் இருந்து பிரித்தானியா வருவோருக்கு அரசு கொடுத்திருந்த சலுகைகள் ரத்து..! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது பிரித்தானியா..!!
பிரித்தானிய பிரான்ஸ் இடையே செய்யப் பட்ட ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாக அனைத்து நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவும் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தி இருந்தது.
தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு சட்டத்தை பல கட்டுப் பாடுகளுடன் தளர்த்தியுள்ளது. சமூக இடைவெளி, மாஸ்க், கை கவசம், என பிரித்தானிய மக்களுக்கு கட்டுப் பாடுகள் உள்ள நிலையில் வெளி நாடுகளில் இருந்து பிரித்தானியா வருவோர், 14 நாட்கள் தங்களை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு பிரான்ஸில் இருந்து வருவோருக்கு மட்டும் நீக்கப் பட்டிருந்தது .
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு மற்றும் பேச்சு வார்த்தையின் பின் பிரான்ஸில் இருந்து வருவோர் தங்களை தனிமை படுத்தும் அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது. இதனை பிரித்தானிய சுகாதார அமைப்பு ஆபத்து என எச்சரிக்கை விட்டது, அத்துடன் பிரான்ஸுக்கு மட்டும் விலக்கு அளிப்பது மற்றைய நாட்டு தலைவர்களிடம் நல்ல பெயர் பெற்று தராது என சில அமைப்புகள் சுற்றிக் காட்டியது.
இதனை தொடர்ந்து தற்போது பிரான்ஸை சேர்ந்தவர்கள் பிரித்தானியா வந்தால் அவர்களும் தங்களை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப் படும் என தெரிவித்துள்ளது..!!