டொனால்ட் ட்ரம்பின் அட்டைப்பட விவகாரத்தால் பரபரப்பு…!
வாஷிங்டன்: பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையுடன் டிரம்ப் இருக்கும் புகைப்படத்தை டைம் பத்திரிக்கை தனது அட்டைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்படும் டிரம்பின் சட்டத்தினை எதிர்க்கும் வகையில் டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் டிரம்ப், ஒரு குழந்தையுடன் இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது.
வெல்கம் டூ அமெரிக்கா என்ற வாக்கியத்துடன் உள்ள டிரம்ப் புகைப்படம் அந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை தனது தாயை தேடி அழுகிறது. அது டிரம்ப் அரசின் குடியேற்ற விதிகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறும் பெரியவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் இதுவரை 2 ஆயிரம் 500 குழந்தைகள் இவ்வாறு பிரிக்கப்பட்டனர்.
இதனால் டிரம்ப் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். டிரம்ப்பின் மனைவி மெலனியாவும் டிரம்ப்பின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்கா – மெக்சிகோ எல்லை வழியாக சட்ட விரோதமாக நுழைபவர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிப்பதை நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
–