மணமேடையில் வைத்து மணமகனின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்து தாலியை கழற்றி வீசிய மணப்பெண்..!!!
இந்தியாவில் நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்து வரும் விஜி என்ற இளைஞனுக்கும், ரேவதி என்ற இளம்பெண்ணுக்கும் நேற்றைய தினம் கோவில் ஒன்றில் மிக விமர்சனமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் இரு வீட்டை சேர்ந்த உறவினர்களும் திரளாக கலந்து கொண்டனர். கெட்டிமேளம் முழங்க, உறவினர்கள் பூ தூவ நல்ல முறையிலே திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்த வேளையில் மாப்பிள்ளை மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்க முயன்ற போது அவருடைய கையை தட்டி விட்ட மணமகள், திடீரென கன்னத்தில் ‘பளார்’ என அறைந்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை பார்த்து அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அர்ச்சகர் மட்டும் மணமகளிடம் பேச்சு கொடுக்க தொடங்கினர்.
அவரையும் கன்னத்தில் ஓங்கி அறைந்த மணப்பெண், கட்டிய தாலியை கழற்றி வீசி எறிந்ததினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட, இரு வீட்டாரையும் வெளியே போகுமாறு கூறிவிட்டு, அர்ச்சகர் கோவில் கதவை இழுத்து பூட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து இருவீட்டாரும் பொலிஸ் நிலையம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அந்தவேளையில் மணமகளுக்கு மனநிலை சரியில்லாததும், அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் விஜிக்கும், உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து உறவினர்கள் இருவரையும் வாழ்த்தி உணவு உண்டு விட்டு சென்றனர்.