ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு சமத்துவம், நீதி ஆகியவற்றை இலங்கை அரசு வழங்கும் என நம்புவதாக இந்திய பிரதமர் தெரிவிப்பு..!!
இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, உரிமை போன்றவற்றை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று எனக்கு நம்பிக்கையுள்ளதாக இந்திய பிரதமர் மோதி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச ஐந்து நாள் விஜயமாக இந்தியாவுக்கு வந்தடைந்தார். இன்றைய தினம் மகிந்த ராஜபக்சவும், இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சந்தித்து உரையாடியுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். மகிந்த மற்றும் மோதிக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, உரிமை போன்றவற்றை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்று எனக்கு நம்பிக்கையுள்ளதாக மோதி தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல நெருங்கிய நட்பு நாடுகள் எனத் கூறினார்.
இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதார திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தாம் விவாதித்தாகக் மோதி தெரிவித்தார். தீவிரவாதம் இந்த பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படும் என்று அவர் கூறியுள்ளார்.