புர்கா அணிந்து வந்த முஸ்லீம் பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞனுக்கு கொலை அச்சுறுத்தல்..!!
வத்தளையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த முஸ்லீம் பெண்ணுக்கு இளைஞன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்ப்பு தெரிவித்த இளைஞனுக்கு கொலை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் தனது இருப்பிடத்தை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி சகாக்கள் குறித்த இளைஞனின் வீடு அமைந்துள்ள பிரதேசத்திற்கு சென்று இளைஞனை தேடியுள்ளனர். இளைஞன் வீட்டை பூட்டி சென்றுள்ளதால், அவர்கள் திரும்பி சென்றுள்ளனர். குறித்த இளைஞன் இத்தாலியில் பணியாற்றி வருவதுடன் விடுமுறை காலத்தில் இலங்கைக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மேற்கொண்ட பயங்கரவாத தற்கொலைக் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவது தொடர்பில் சமூகத்தில் கடும் அச்சம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அவசர காலச் சட்டத்தின் கீழ் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத இந்த புர்காரால் சமூக பாதுகாப்பு மேலும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும் புர்காவுக்கான எதிர்ப்பு சமூகத்தில் குறைந்துள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Videos & Video Copyrights Owned By: IBC Tamil News