அவுஸ்திரேலியா மண்ணில் தனது திறமையை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்..!!
இன்றைய தினம் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் மீண்டும் களத்தில் இறங்கி தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீக்கு நிதி திரட்டும் வகையில் இன்றைய தினம் மெல்பர்னில் மைதானத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்குபற்றும் போட்டி நடைபெற்று வருகிறது. அதற்கு இடையில் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் பந்து வீச்சாளர் எல்லிஸ் பெர்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், இன்றைய தினப் போட்டி இடைவேளையின் போது, இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் விளையாட வேண்டும், அவர் மைதானத்தில் இறங்கி விளையாடுகிறார் என்று தெரிந்தால், ரசிகர்கள் அதிகம் வருவார்கள்.
இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார். இதற்காக சச்சின் விளையாடுவதாக அறிவித்தார். அதே போன்று இன்றைய போட்டியின் இடைவேளையின் போது இறங்கிய சச்சின், ஒரு ஓவர் விளையாடி 6 ஓட்டங்கள் குவித்தார். அதில் ஒரு பவுண்டரி பறக்கவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
Videos & Video Copyrights Owned By: cricket.com.au