நேற்று நடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வராலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ் இளையோர் அணி..!!
நேற்றைய தினம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண இறுதிப் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த போட்டியில் பங்களாதேஷ் இளையோர் அணி இந்திய அணியை வீழ்த்தி வராலாற்று சாதனை படைத்து உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. இதுவரைக்கும் உலகக்கிண்ணத்தை இந்திய இளையோர் அணி தொடர்ந்து நான்கு முறை கைப்பற்றி வந்ததோடு, பங்களாதேஷ் அணி இதுவே முதல் தடவை இந்தியாவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
நேற்றைய தினம் Potchefstroom மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி நடைபெற்றிருந்த நிலையில், போட்டி நிறைவின் போது பங்களாதேஷ் அணியினர் உலகக்கிண்ணத்தை மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, இந்திய மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து நடுவர்கள் மற்றம் மைதான அதிகாரிகள் ஒன்றிணைந்து இரண்டு அணி வீரர்களையும் சமரசம் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
යොවුන් ලෝක කුසලානයේ උණුසුම වැඩි වී තරඟයෙන් පසු දෙපිළේම ක්රීඩකයන් පිටිය මැද ගුටි ඇන ගත් හැටි
යොවුන් ලෝක කුසලානයේ උණුසුම වැඩි වී තරඟයෙන් පසු දෙපිළේම ක්රීඩකයන් පිටිය මැද ගුටි ඇන ගත් හැටි
Hiru Sports Corner ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಫೆಬ್ರವರಿ 9, 2020