19 வயது இளம் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுவன்..!!! இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்..!!
நேபாளத்தைச் சேர்ந்த 19 வயதுடைய அமீர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி ஈடுபட்டு வருகிறார். அமீர் கேஸ் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தை சேர்ந்த 19 வயதுடைய அகிரிதி என்ற இளம் பெண் ஒருவர் வேலை செய்து வந்தார்.இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தனர். இவர்கள் இருவரின் நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.
இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் அகிரிதி பெற்றோரை உதறி தள்ளி வீட்டை விட்டு ஓடி வந்த அமீர் மற்றும் அவர் குடும்பத்தாருடன் தங்கினார். தங்கள் மகளின் இந்த மோசமான செயலால் அகிரிதியை கைவிட்ட அவர் பெற்றோர் நேபாளத்துக்கு சென்று விட்டனர். அதே நேரத்தில் அமீரின் பெற்றோர் தங்கள் மகனுக்கும், அகிரிதிக்கும் கடந்த 15ஆம் திகதி திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்னர் அமீரும், அகிரிதியும் தம்பதியினராக சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், அமீரின் வயது தொடர்பாக அறிந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்த பொலிசார் இருவரின் வயது சான்றிதழ்களையும் பார்த்த போது அமீருக்கு 16 வயது என்பதும், அகிரிதிக்கு 19 வயது என்பதும் உறுதியானது. அதன் பின்னர் சிறுவன் அமீரை பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் அகிரிதி மற்றும் அவர் மாமனார், மாமியாருக்கும் விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது