இந்தியக் கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக ஜெட் விமானம் விபத்து..!!
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக ஜெட் விமானம் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள தகவல்படி, கோவா அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மிக்-29கே ரக ஜெட் விமானம் இன்று காலை 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஜெட் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவொரு உயிராபத்தும் ஏற்படவில்லை என்று விமானி பாராசூட் மூலம் குதித்து பாதுகாப்பான முறையில் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கடற்படை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோவா அருகே கிராமப் பகுதியில் நடந்த மற்றொரு மிக்-29கே ரக விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் தற்போது மீண்டும் விபத்து நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.