ஜெனிவாவுக்கு செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன்..!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் ஜெனிவாவுக்கு பயணம் செய்யவுள்ளனர்.
அவர்களுடன் பேராசிரியர்களான அருட்தந்தை குழந்தைசாமி, சேவியர், இளம்பரிதி உட்பட 15 பேர் அடுத்து வரும் நாட்களில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளனர். தமிழர் தாயகத்தில் நடந்தாக கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக தமது கருத்துக்களை கூட்டத் தொடரில் இவர்கள் பதிவு செய்யவுள்ளனர்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலிருந்து வெளியேறவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியை கொடுப்பதற்கு உரிய மாற்று வழிகளை உடன் கையில் எடுக்குமாறு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை இவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.