சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி..! மனைவியை காப்பாற்ற சென்ற கணவனும் நீரில் மூழ்கி பலி..!!
இந்தியாவில் கர்நாடகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பூர்ணிமா என்ற இளம் பெண்ணின் கணவர் 37 வயதுடைய கெம்பண்ணா என்பவர் விவசாயியாக வேலை செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய ஒரு ண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கெம்பண்ணா மற்றும் பூர்ணிமாவுக்கு இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் பூர்ணிமா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் கெம்பண்ணா தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சந்தித்தார். அதன் பின்னர் அவர், பூர்ணிமாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதன் பேரில் பூர்ணிமாவும் தனது குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு புறப்பட்டார். பூர்ணிமாவையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கெம்பண்ணா தேமஹள்ளி கிராமத்திற்கு புறப்பட்டார்.
கெம்பண்ணா மோட்டார் சைக்கிளை ஓட்ட, பூர்ணிமா குழந்தையுடன் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் தேமஹள்ளி கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது, பூர்ணிமா திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார். அதன் பேரில் கெம்பண்ணா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, அங்கு ஓடும் கபினி ஆற்றுக்கு சென்ற பூர்ணிமா திடீரென ஆற்றில் குதித்துவிட்டார். அதைக் கண்டு கெம்பண்ணா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ஆற்றில் குதித்து பூர்ணிமாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் 2 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களுடைய குழந்தை அனாதையாக மோட்டார் சைக்கிளிலேயே அமர்ந்து கொண்டு இருந்தனர்.
குழந்தை தாய் மற்றும் தந்தையை காணாது கதறி அழுது கொண்டிருந்தன. அதைக் கண்ட அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்து பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினருடன் விரைந்து வந்து கெம்பண்ணா மற்றும் பூர்ணிமாவின் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணையில் பூர்ணிமா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், அவரை காப்பாற்ற முயன்ற போது கெம்பண்ணா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. ஆனால் எதற்காக பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. அதன் பின்னர் பொலிசார் அனாதையான அந்த குழந்தையை மீட்டு பூர்ணிமாவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.