மக்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் இந்திய மாநிலம் பற்றிய 2020 அறிக்கை வெளியானது..! முதல் 10 இடங்களில் இந்த மாநிலங்கள் தான்..!!
இந்தியாவில் மக்கள் சந்தோசமாக வாழும் மாநிலம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை, சுகாதாரம், உழைப்பு, உணவு, உடல் நலம், நோய் தொற்றுக்கள், புரிந்துணர்வு, பல விடயங்களை ஆராய்ந்து பேராசிரியரான ராஜேஷ் கே. பில்லானியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் மாநில ரீதியாக மக்களின் மனநிலை, மற்றும் மாற்றங்கள் என் நடத்தப்பட்ட மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலங்களில் முதலிடம் பிடித்திருப்பது மிசோரம் மாநிலம். இங்கு வாழும் மக்களில் 95% மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிய வந்துள்ளது.
இங்கு பொது இடங்கள் உட்பட அனைத்து இடங்களும் மக்கள் தூய்மையாக வைத்திருப்பதுடன் வறுமை, மற்றும் நோய் தொற்றும் இங்கு குறைவாகவே உள்ளது. இதில் அடுத்தடுத்த இடங்களை பஞ்சாப், அந்தமான் நிகோபார், தீவுகள் இடம் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பஞ்சாப், குஜராத், உத்தரபிரதேசம்,தெலுங்கானா, ஆகிய மாநிலங்கள் முதல் 10க்குள் இடம் பிடித்துள்ளது.
2019ம் ஆண்டில் இருந்து 2020வரை எடுக்கப் பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியானது. ஒரு சில மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் மகிழ்ச்சியான மாநிலங்களுக்குள் வர முடியாமல் போய் உள்ளது..! மிசோரம் மாநில மக்களுக்கு எங்கள் வாழ்த்துகள்..!!