ஈரான் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு…!!
ஈரான் அரசாங்கம் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து யுரேனியத்தின் அளவை 5 வீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவித்தலை இன்று ஈரான் உயர் அதிகாரிகள் வெளியிட்டார். மேலும் இது 2015 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் தனது அணுவாயுத உற்பத்திகளின் போது 3.67 வீத யுரேனியத்தையே பயன்படுத்தி வந்துள்ளது. இந்த நிலையில் யுரேனியத்தின் அளவை 5 வீதமாக கூட்டுவதற்கு ஈரான் தீர்மானித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஈரானின் அணுவாயுத உற்பத்தி துறைசார் சிரேஷ்ட தலைவர் அப்பாஸ் அராக்கி தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மன், சீனா போன்ற சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த 6 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் ஈரான் 2015 அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைய ஈரான் தன்னுடைய அணுவாயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. மேலும் ஈரான் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.