ஒன்றரைக்கிலோ உலோகங்களோடு தாலியையும் வயிற்றில் சுமந்த மனநலம் குன்றிய பெண்..!
ஆணிகள், போல்ட், செயின், பிரெஸ்லெட், வளையல்கள், சேப்டிப் பின், செப்பு மோதிரம் தாலி என்று 1.5 கிலோ கிராம் நிறையுள்ள உலோகங்களை வயிற்றில் சுமந்து திரிந்த மனநலம் குன்றிய பெண்ணுக்கு,
அறுவைச் சிகிச்சை மூலம் மேற்படி பெண்ணின் வயிற்றிலிருந்து அவற்றை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். இந்தியாவின் மகாராஸ்டிராவிலேயே இச் சம்பவம் நடந்துள்ளது.
மனநலம் குன்றிய நிலையில் தெருக்களில் அலைந்து திரிந்த பெண்ணை வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் சங்கீதா என்ற அப் பெண்ணுக்கு எக்ரே எடுத்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் அவரது வயிற்றில் 1.5 கிலோ நிறையுடைய மேற்படி பொருட்கள் இருந்துள்ளன. சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்றுள்ள அறுவைச் சிகிச்சையின் பின்னர் அவை அப் பெண்ணின் வயிற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அகுபோஜியா எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு இரும்புப் பொருட்களை உண்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”